ஃப்ரீசர் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்து 12 பேர் காயம்

67பார்த்தது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, துக்க வீட்டில் ஃப்ரீசர் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்து 12 பேர் காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லோகநாதன் என்பவர் இன்று அக்.3 காலை உயிரிழந்த நிலையில், அஞ்சலி செலுத்த வந்தவர்கள், அவர் உடல் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீசர் பாக்ஸில் கை வைத்த போது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்த லோகநாதனின் மனைவி உட்பட 12 பேர் மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி