டெம்போ மீது பேருந்து மோதிய விபத்து.. 12 பேர் பலி

62பார்த்தது
டெம்போ மீது பேருந்து மோதிய விபத்து.. 12 பேர் பலி
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் இன்று (அக்.20) அதிகாலை சாலையில் சென்ற பேருந்து ஒன்று டெம்போ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 5 முதல் 12 வயதுக்குட்பட்ட 8 குழந்தைகளும் அடங்குவர். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி