மகளிர் உரிமைத் தொகையில் புதிய பயனாளிகள் சேர்க்கும் முடிவு ஜூலை மாதமே நடக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பெண்கள் இணைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பயனாளர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் இந்த மாத கடைசியில் அச்சடிக்கப்பட்டு அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என திட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தில் புதிதாக சேர்க்கப்படுபவர்களுக்கு ஜூன் 15க்கு பதில் ஜூலை 15ம் தேதியே பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.