காவிரி விவகாரம் - கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம்!

74பார்த்தது
காவிரி விவகாரம் - கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டம்!
தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து கர்நாடகாவில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. கனமழை காரணமாக, காவேரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட 11,500 கன அடி நீரை கடந்து கபினி அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த சூழலில் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து இன்று மாலை அனைத்து கட்சி கூட்டமும் நடத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி