அரசு கல்லூரிகளில் சேர 1.12 லட்சம் பேர் விண்ணப்பம்

53பார்த்தது
அரசு கல்லூரிகளில் சேர 1.12 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் 94.56 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தொடர்ந்து, மாணவர்கள் தங்களது உயர் கல்விக்காக பல கல்லூரிகளில் விண்ணப்ப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 1.12 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். மே 20ஆம் தேதி வரை அவகாசம் இருப்பதால் மேலும் விண்ணப்பப் பதிவு அதிகரிக்கும் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி