உலகில் உயரமான ரயில் பாலம், சோதனை ஓட்டம் வெற்றி

காஷ்மீரை நாட்டின் பிற ரயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரெயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் மேல் 1,178 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், உலகின் மிக உயரமான ரயில் பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த பாலத்தின் உறுதித் தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் நேற்று(ஜூன் 20) 8 பெட்டிகளை கொண்ட மின்சார ரயிலை செனாப் ரயில் பாலத்தின் மீது இயக்கி சோதிக்கப்பட்டது. ரயில் பாலத்தில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டதாகவும், இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி