குழந்தைகளுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்

74பார்த்தது
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்பு செலவுக்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து வரும் முதல்வர், "பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் வங்கியில் டெபாசிட் செய்யப்படும். குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் வட்டியுடன் ரூ.5 லட்சம் வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வைப்பு நிதி வைப்படும்" என உறுதியளித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி