முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது - எடப்பாடி பழனிசாமி

அதிமுகவினர் சபையில் இல்லாதபோது வந்து, தான் ஓடி ஒளியவில்லை என்று முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ‘X’ தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “கள்ளச்சாராய மரணங்கள் குறித்த விவாதம் நடத்தக்கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். அப்போது அவையில் இல்லாமல் ஒளிந்துகொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய பிறகு வந்து, தான் ஒரு "ஜனநாயக மாண்பு காப்பாளர்" என்று ஒரு நாடகமாடியுள்ளார்.

நீங்கள் அதிகாரிகளை மாற்றவே 50 உயிர்கள் பலியாக வேண்டுமா? இப்போது நீங்கள் வாசிக்கும் பட்டியலால் போன 50 உயிர்கள் மீண்டும் வந்துவிடுமா?” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி