சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி!

60பார்த்தது
சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி!
சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி கொண்டுவரப்படவுள்ளது. இதற்காக ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வேக்கு 12 பெட்டிகள் கொண்ட 2 குளிரூட்டப்பட்ட மின் மோட்டார் யூனிட்டுகளை ஒதுக்கி உள்ளதாக வீட்டு வசதித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில்களில் ஏசி பெட்டி வசதி கொண்டு வருவதன் மூலம், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி