கள்ளக்குறிச்சி விவகாரம்.. வீடியோ வெளியிட்ட முன்னாள் எஸ்பி

65பார்த்தது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் காரணமாக முன்னாள் எஸ்பி மோகன்ராஜ் ஓய்வு பெற்றதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சி சம்பவத்துடன் தம்மை தொடர்புப்படுத்தி கூறப்படும் கருத்துக்கள் பொய்யானவை. மகளின் பேருகாலத்திற்காக தான் விருப்ப ஓய்வு பெற்றேன். வேறு காரணம் இல்லை. ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பயந்து பணி ஓய்வு பெற்றதாக சிலர் பொய் செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை” என்றார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி