திருமணம் என்ற போர்வையில் திருட்டு.. பலே திருடி கைது

7345பார்த்தது
திருமணம் என்ற போர்வையில் திருட்டு.. பலே திருடி கைது
உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த நபரை ஒரு பெண் திருமணம் செய்துள்ளார். சில தினங்களுக்கு பிறகு அந்த பெண் வீட்டில் இருந்த பணத்தை திருடிவிட்டு மாயமாகியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இந்த பெண் இதேபோல் ஏழு பேரை திருமணம் செய்து ஏமாற்றியதும், மற்ற கணவர்களும் புகார் அளித்திருப்பதும் தெரியவந்துள்ளது. திருமணம் செய்து சில நாட்களுக்குப் பிறகு மணமகன் மற்றும் குடும்பத்தினருக்கு தூக்க மாத்திரை கொடுத்து, பணம், நகைகளை திருடிச் செல்வதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி