பர்வத மலையில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பர்வதமலையில் மல்லிகார்ஜுனர் பிரம்மராம்பிகை கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி