ஏப்ரல் 19-ஆம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் திருவண்ணாமலை மாவட்ட நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து இரவு பகல் பாராது உழைத்த திமுக நிர்வாகிகளுக்கு மற்றும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று திமுக அலுவலகத்தில் பேரூராட்சித் தலைவர் சாதிக் பாஷா மற்றும் நகர செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.