குவைத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் தள பதிவில், “குவைத் தீ விபத்தில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 43 பேரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் உடல்களை சொந்த ஊர் கொண்டு வரவும், இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை வேண்டும். உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.