அன்பு வெறுப்பை வென்றது, பணிவு ஆணவத்தை வென்றது. பிரதமர் நரேந்திர மோடி ஒரு பரமாத்மாவாக இருக்கிறார். அவர் அம்பானி மற்றும் அதானிக்கு ஆதரவான முடிவுகளை எடுப்பதற்கு வழிகாட்டுவார். ஆனால் நான் ஒரு மனிதன். நான் கடவுளாக நினைப்பது இந்தியாவின் ஏழை மக்கள், வயநாட்டு மக்கள் தான். மக்கள் என்னிடம் சொல்வதை நான் செய்கிறேன் என தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதன் முறையாக கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மக்களிடையே பேசினார்.