குவைத் தீ விபத்து: உரிமையாளரை கைது செய்ய உத்தரவு

54பார்த்தது
குவைத் தீ விபத்து: உரிமையாளரை கைது செய்ய உத்தரவு
குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் உள்ள கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு தமிழர்கள் உட்பட 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்தில் பலத்த காயமடைந்த பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது தொழிலதிபர் ஆபிரகாமை உடனடியாக கைது செய்ய குவைத் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.