இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், அவர்களது மீன்பிடி படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.