கனமழை.. நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

77பார்த்தது
கனமழை காரணமாக அசாமில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு நிலைமை மோசமாகி வருகிறது. பலியானவர்களின் எண்ணிக்கை 30ஐ தாண்டியுள்ளது. 15 மாவட்டங்களில் 1.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிராமத்தில் சிக்கிக்கொண்ட முதியவர்களை மீட்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி