கள்ளக்குறிச்சி விவகாரம் - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

83பார்த்தது
கள்ளக்குறிச்சி விவகாரம் - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் இன்று (ஜூன் 19) உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், “கள்ளக்குறிச்சியில் 4 பேர் மரணம் தொடர்பாக ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மூத்த காவல் அதிகாரிகள் சம்பவத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வருகின்றனர். அதன் பின்னர், உண்மை வெளியாகும்” என டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி