மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் சிறை

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 47 வயது கூலித்தொழிலாளி. இவர் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டு ஆத்தூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று (ஜூன் 21) தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

தொடர்புடைய செய்தி