திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

61பார்த்தது
திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், வினாத்தாள் கசிவு செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 24ஆம் தேதி திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுங்கட்சி மாணவரணியின் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி