பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு

65பார்த்தது
பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு வரை 52 பேர் பலியாகி இருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் பலியாகினர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், கல்யாண சுந்தரம் உள்பட 3 பேர் இரவில் உயிரிழந்தனர். சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி