பெண்ணை 2 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்

76பார்த்தது
பெண்ணை 2 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்
மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் இரண்டு பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து,
அவரை கொல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பெண் அரை நிர்வாணமாக 1.5 கிலோமீட்டர் தூரம் ஓடியுள்ளார். தனக்கு நிகழ்ந்த கொடுமையை கிராம மக்களிடம் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த மக்கள் தப்பியோடிய குற்றவாளிகளை சுற்றிவளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி