இலங்கையின் சுகாதார நெருக்கடி மோசமடைந்துள்ளது. இலங்கை மருத்துவர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறியதால் சுகாதார அமைப்பு சீர்குலைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மொத்த மருத்துவர்களில் 10 சதவீதம் (1,700) பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இலங்கை சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனா, நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக அல் ஜசீரா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் நாடு முழுவதிலும் சுகாதாரத்துறை சிக்கலில் தவிக்கிறது.