ஆட்சியர் சொன்ன பொய்யால்தான் இத்தனை பேர் உயிரிழந்தனர் - இபிஎஸ்

71பார்த்தது
ஆட்சியர் சொன்ன பொய்யால்தான் இத்தனை பேர் உயிரிழந்தனர் - இபிஎஸ்
நாட்டை உலுக்கிய கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் பேரவையில் விவாதிக்க அனுமதி கோரினோம் ஆனால் இது குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கள்ளச்சாராய சம்பவத்தை மூடி மறைத்து, அதனை திசை திருப்ப மாவட்ட ஆட்சியர் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே கள்ளச்சாராயம் குடித்ததால் தான் முதல் 4 பேர் உயிரிழந்தார்கள் என்பதை தெரிவித்திருந்தால் இத்தனை உயிர்கள் பறிபோய் இருக்காது.

3 ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடக்கிறது என்றால், திமுக அரசின் அலட்சியப் போக்குதான் காரணம். 50 பேர் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி