விஷச் சாராய பலி எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் 94 பேர் புதுச்சேரி ஜிப்மர், சேலம், கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. புதுச்சேரி ஜிப்மரில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி