“முதலமைச்சர் ஆணைப்படி கள்ளக்குறிச்சி விரைகிறேன்” - எ.வ.வேலு

51பார்த்தது
“முதலமைச்சர் ஆணைப்படி கள்ளக்குறிச்சி விரைகிறேன்” - எ.வ.வேலு
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் இன்று (ஜூன் 19) உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் எ.வ.வேலு தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த குடும்பத்தினரையும், சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் நேரில் பார்த்துவர கூறிய முதலமைச்சர் ஸ்டாலினின் ஆணைப்படி கள்ளக்குறிச்சி விரைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி