சிப்ஸ் பாக்கெட்டில் செத்துப்போன தவளை.. அதிர்ச்சி சம்பவம்

58பார்த்தது
சிப்ஸ் பாக்கெட்டில் செத்துப்போன தவளை.. அதிர்ச்சி சம்பவம்
சமீப காலமாக உணவுகளில் வினோதமான பொருட்கள் இருப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு ஐஸ்கிரீமில் மனித விரல், சாக்லெட்டில் எலி என அந்த வரிசையில் தற்போது சிப்ஸ் பாக்கெட்டுக்குள் தவளை கிடந்துள்ளது. குஜராத் ஜாம்நகரைச் சேர்ந்த ஜாஸ்மின் படேல் என்பவர் நேற்று (ஜூன் 18) தன்னுடைய 4 வயது குழந்தைக்கு சிப்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளார். அதில், இறந்த தவளை ஒன்று கிடந்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்த புகார் அளித்த நிலையில் தற்போது இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி