"இ-சேவை மையங்களை உயர்த்த திட்டம்" - பிடிஆர்

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கி துறை ரீதியிலான கோரிக்கைகள், அதன் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று(ஜூன் 28) நடந்த கூட்டத் தொடரில் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், இ-சேவை மையங்கள் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, “இ-சேவை மையங்களை 20 ஆயிரத்தில் இருந்து 35ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்களுக்கு தகுதி கண்டறிந்து இ-சேவை மையத்தை தொடங்க ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

இ-சேவை மையங்கள் அதிககப்படும் சூழலில் மக்களின் அரசுத் திட்டங்கள் சார்ந்த பணிகள் விரைந்து தீர்க்கப்படும். மகளிர் உரிமைத் தொகை, ஆதார், பான் கார்டு, பட்டா, சிட்டா, வாக்காளர் அட்டை பதிவு, பாஸ்போர்ட், ஆன்லைன் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல தரப்பிலான அரசு சார்ந்த பணிகளுக்கு இ-சேவை மையம் இணைப்பு பாலமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி