பகுதிநேர 1400 இளங்கலை பொறியியல் இடங்களுக்கு 720 பேர் மட்டுமே விண்ணப்பம்!

பகுதிநேர இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாக கோவை தொழில்நுட்ப கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் கோவையில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மொத்தமுள்ள 1400 இடங்களுக்கு வெறும் 720 விண்ணப்பங்களே பெறப்பட்டுள்ளதாக கோவை தொழில்நுட்ப கல்லூரி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி