முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு பட்டம் பெற ஓர் நல்வாய்ப்பு!

59பார்த்தது
முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு பட்டம் பெற ஓர் நல்வாய்ப்பு!
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் முனைவர் பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு பட்டம் பெற ஓர் சிறந்த வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் முனைவர் பட்ட ஆய்வுகளை முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் மேற்கொள்ளலாம். முனைவர் பட்ட ஆய்வுக்கான பொருண்மைகள் தமிழ் இலக்கியம், அயல்நாட்டுத் தமிழ் இலக்கியம், ஒப்பிலக்கியம் சார்ந்த பொருண்மை குறித்து மேற்கொள்ளப்படலாம். தமிழில் முதுநிலையில் 55 சதவிகித மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான தரம் பெற்றிருத்தல் வேண்டும்.

தமிழ்ப்பல்கலைக்கழகம் நடத்தும் ஆய்வுப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு, மாநிலத் தகுதித் தேர்வு, மாநில அளவிலான தகுதித் தேர்வு, இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை தேர்வில் தகுதி பெற்றவர்கள் முனைவர் பட்ட சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி