நீட் முறைகேடு: முதலமைச்சர் தீர்மானம்

52பார்த்தது
நீட் முறைகேடு: முதலமைச்சர் தீர்மானம்
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், "நீட் தேர்வு வேண்டாம் என்பதால் அதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். தமிழ்நாட்டின் குரல், தற்போது இந்தியாவின் குரலாக எதிரொலித்து வருகிறது. தமிழ்நாட்டின் நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வை கைவிடும் வகையில் மருத்துவ ஆணைய சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்தி