சென்னையில் இன்று (ஜூன் 28) 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விழா அரங்கத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் துபாயில் இருந்து 50 பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். காதில் மைக், பாக்கெட்டில் ஸ்பீக்கர் என நிகழ்ச்சியை கட்டுக்குள் வைத்துள்ளனர்.