அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். போலி சான்றிதல் கொடுத்து ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் வலை வீசியுள்ளனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.