அடடா மழைடா அட மழைடா.. மழையில் மகிழ்ச்சி நடனம்

கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வந்தது. தொடர்ந்து நேற்று (மே 20) மாலை 4 மணியளவில் துவங்கிய மழையானது கனமழையாக பெய்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்த கனமழையில், மாநகராட்சிக்குட்பட்ட கரூர் மினி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினி பேருந்து மீது ஏறி வாலிபர் ஒருவர் குதூகலமாக நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி