அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில்: எடப்பாடி பேச்சு

மதுரை: திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதியிலே சொல்லி மக்களை குழப்பி வருகிறது, நீட் தேர்வை ரத்து செய்யும் நிலைப்பாட்டில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என மதுரையில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி பேச்சு

மதுரை பழங்காநத்தத்தில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார், இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர். பி. உதயகுமார் செல்லூர் கே. ராஜு, நத்தம் விஸ்வநாதன், கே. டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர், பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் "நமது குரலை நாடாளுமன்றத்தில் டாக்டர் சரவணன் எதிரொலிக்க செய்வார், டாக்டர் சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். 5 ஆண்டுகளாக பதவி வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மக்களுக்காக எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை, 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐந்து ஆண்டுகளாக என்ன செய்தார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அழுத்தம் கொடுத்து இருந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது பயன்பாட்டிற்கு வந்திருக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பதற்கும் மீட்டெடுப்பதற்கும் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி