ஏப்ரல் 1 முதல் கார்களின் விலையை உயர்த்தும் டொயோட்டா

64பார்த்தது
ஏப்ரல் 1 முதல் கார்களின் விலையை உயர்த்தும் டொயோட்டா
டொயோட்டா நிறுவனம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்துகிறது. முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் கார்களின் விலையை உயர்த்தவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் 1 சதவீதம் வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் இயக்க செலவுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட விலை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில், டொயோட்டா கிளான்சா போன்ற ஹேட்ச்பேக் முதல் ஃபார்ச்சூனர் போன்ற எஸ்யூவிகள் வரை பல்வேறு மாடல்களை விற்பனை செய்கிறது.

தொடர்புடைய செய்தி