மதுரை மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி கடச்சனேந்தல் வாரச்சந்தையில் சிலம்பாட்டம், பறையாட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களிடம் 100 சதவீத வாக்களிப்போம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இதில் ஏராளமான சிலம்பாட்ட கலைஞர்கள் பறையாட்ட கலைஞர்கள் சமூக ஆர்வலர்கள் அரசு அதிகாரிகள் ஊராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.