கர்நாடகாவின் யரகனஹள்ளியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று (மே 22) சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். வீட்டில் இருந்த எல்பிஜி சிலிண்டரில் இருந்து கசிந்த வாயுவை சுவாசித்ததால் மூச்சுத் திணறி அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் குமாரசாமி (45), அவரது மனைவி மஞ்சுளா (39) மற்றும் அவர்களது குழந்தைகள் அர்ச்சனா (19), சுவாதி (17) என அடையாளம் காணப்பட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.