பழனி கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்

56பார்த்தது
பழனி கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (மே 22) தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகன்- வள்ளி தெய்வானையுடன் எழுந்து அருளினார்.

பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதியில் தேரில் வலம் வந்த முருகனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதே போல் தமிழகம் முழுவதும் அறுபடை முருகன் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

டேக்ஸ் :