நாய்களுக்கு மோப்ப சக்தி ஏன் அதிகம் தெரியுமா?

நாய்கள் மோப்ப சக்தியைப் பயன்படுத்தி, மற்ற நாய்களின் வயது, ஆணா - பெண்ணா போன்றவற்றை கண்டுபிடித்துவிடும். இதை அடிப்படையாக வைத்தே வெடிகுண்டு, போதைப்பொருளை கண்டுபிடிக்க அதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒன்று முதல் 2 கி.மீ. துாரம் வரை அவை மோப்ப சக்தியால் எளிதில் உணர்ந்து கொள்ளும். அபார மோப்ப சக்தி நாய்களுக்கு இருப்பதற்கு காரணம் அதன் மூக்கு எப்போதும் ஈரப்பதத்தோடு இருப்பது தான்..! நாயின் தலையில் இருக்கும் 'வாசனையை நுகரும் பகுதியின்' அளவு, மனிதர்களைக் காட்டிலும் 50 மடங்கு அதிகம்.

தொடர்புடைய செய்தி