கோர விபத்து: கர்ப்பிணி உட்பட 4 பேர் உடல் நசுங்கி பலி!

10784பார்த்தது
சேலம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் கர்ப்பிணி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சொக்கம்பட்டி அரூர் நெடுஞ்சாலையில் முன்னாள் இருந்த 2 பைக் மற்றும் லாரியில் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பைக் மீது அமர்ந்திருந்த கர்ப்பிணி, ஒரு பெண், குழந்தை மற்றும் ஆண் உட்பட 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் தனியார் பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி