மாமியாரை கூலிப்படை வைத்து கடத்திய மருமகன்!

80பார்த்தது
மாமியாரை கூலிப்படை வைத்து கடத்திய மருமகன்!
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் பகுதியை சேர்ந்த ஜெபி சகாய மெட்டில்டா தனது மகள் ஆஸ்மியை (27) சுபாஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில், தனது மாமியார் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றக் கூறி மருமகன் சுபாஷ் தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால், மெட்டில்டா சொத்தை எழுதிக் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த சுபாஷ் மாமியாரை கூலிப்படை வைத்து கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவர் சத்தம் போடவே அவரை விட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றனர். இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை காவல்துளையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி உள்ள சுபாஷ்-யை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி