கள்ளகாதலனை பெண்களுடன் பழகவிட்டு பணம் பறித்த பெண்

55பார்த்தது
கள்ளகாதலனை பெண்களுடன் பழகவிட்டு பணம் பறித்த பெண்
சென்னை ஆவடியை சேர்ந்த சிவக்குமார் (33) தனது தோழி நித்யா (33) என்பவருடன் திருமுல்லைவாயல் பகுதியில் நியோ பிட்னெஸ் ஜிம் நடந்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த ஜிம்மிற்கு ஆவடியை சேர்ந்த 35 வயது பெண் உடல் எடையை குறைக்க வந்துள்ளார். அவருக்கும் சிவகுமாருக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை நித்யா வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்த 35 வயது பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் கறந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில், சிவகுமார், நித்யா ஆகிய இருவருமே கள்ளகாதலர்கள் எனவும், திட்டமிட்டு இவ்வாறு அப்பெண்ணிடம் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி