தொடர்ந்து அம்மனுக்கு அரண்மனை பொங்கல், மாவிளக்கு, வாணவேடிக்கைகள் நடந்தது. நேற்று முன் தினம் காலை பக்தர்கள் பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அன்னதானம் நடந்தது. அன்றிரவு ஊர்மா விளக்கு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை அம்மன் குளத்திலிருந்து பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து ஊர் பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்றிரவு ஊர் சார்பில் பத்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர்.
பின்னர் இரவு கரகம் அம்மன் குளம் சென்றடைந்தது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் காரணக் காரர்கள், விழாக்குழுவினர் மற்றும் நத்தம் மீனாட்சிபுரம் பொதுமக்கள் செய்திருந்தனர்.