காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

559பார்த்தது
காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
கன்னியாகுமரி குலசேகரத்தைச் சேர்ந்த ஜெனிஷ் (25) என்பவர் 2022 ஆம் ஆண்டு ஜெனிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெனிஷ் குடித்துவிட்டு வருவதால் அடிக்கடி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், பிப்ரவரி 26ஆம் தேதி ஜெனிஷா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால், மனவுளைச்சலில் இருந்த ஜெனிஷ் கடந்த 7ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்த நிலையில் மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 8) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி