அமலாக்கத்துறை கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமற்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவாலின் மனு நேற்று தள்ளுபடியானது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார்.