குறிஞ்சிப்பாடி: மரத்தில் மோதிய பைக் - 3 சிறுவர்கள் காயம்

குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்த சரண்ராஜ் மகன் அஸ்வந்த், சகோதரர் ஹரிஸ், அதே பகுதியை சேர்ந்த மாதேஷ் ஆகிய மூவரும் நேற்று பெருமாள் ஏரிக்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் மரத்தில் மோதியது. இதில் சிறுவர்கள் 3 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி