தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கும் திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. குடும்ப தலைவிகள் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனடையலாம். ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அவரது மனைவிக்கு கிடைக்கும். திருமணமாகாத பெண், கைம்பெண், திருநங்கை தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவியாகக் கருதப்படுவர்.