ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம் - அமைச்சர் அறிவிப்பு

62பார்த்தது
ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம் - அமைச்சர் அறிவிப்பு
ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம் அமைக்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். விளையாட்டு துறை மானியக் கோரிக்கையில் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் டைவிங் பூல் உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் அமைக்கப்படும். தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீரர், வீராங்கனைகள், சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி